முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் தான் பிரச்சனை இங்க.. அரசியல் நடிப்பா யாருடைய இயலாமை இது..?

இங்கே நிறைய பேருக்கு விஜய் மேல நடிப்புக்கு அப்பாற்பட்டு பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்குனு நினைக்கிறேன்



உண்மையை சொன்னா 'வலிமை'யை விட லியோ ஒரு எண்டர்டெயின் மூவிதான். என்ன ஒன்னு அவனுகளே ஏற்படுத்தின "எதிர்பார்ப்பை” அந்த படம் பூர்த்தி செய்யல. 

தமிழ் சினிமாவில் "தளபதி” படமும் அப்படித்தான். பாட்டு, ரஜினி ஸ்டில், மம்மூட்டினு ஏக ஹைப். ஆனா படம் வேற மாதிரி இருந்துச்சு. முதல் ஒரு வாரம் தாண்டி படம் மெதுவா கீழே போச்சு. அப்புறம் விமர்சனம் விளம்பரம் எல்லாம் செஞ்சு படம் தப்பிச்சு ஓடுச்சு. லியோ படத்தை பொறுத்த வரை அந்த ஓவர் எதிர்பார்ப்பு தான் பிரச்சினையே.

வெற்றிவிழா கொண்டாடலாமானு கேட்டா ? இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில படம் செலவழிச்ச தொகையை எடுத்துட்டாலே அது வெற்றிப்படம்னு ஆகிப்போச்சு. அப்படி பார்த்தா இது வசூலாச்சு. சரி வசூலாகலனு இருக்கட்டும். அதுனால நமக்கு என்ன ? இப்படி பொய்யா சொன்னா தயாரிப்பாளர் இல்லாமே போய்டுவான். அப்படி இல்லாமல் போன நடிகர்கள் இங்கே ஏராளம்.

யூடியூப், ரீல்ஸ், பேஸ்புக்னு ரொம்ப ஒவரா பேசிட்டே இருக்கானுக. விஜய் பட தயாரிப்பாளர்கள் அடுத்து விஜய் கூப்பிட்ட ஓடிப்போய் நிக்கதான் போறாங்க. ஏஜிஎஸ் தான் அடுத்த படம் தயாரிக்குது. சன் பிக்சர்ஸ் கால்ஷீட் வாங்கி வச்சுருக்கு. ஆர் பி செளத்திரி வாங்கி வச்சுருக்காரு. அந்த படங்களை இதே விநியோகதஸ்ர்கள் வாங்க தான் போறாங்க. ஏன்னா அவங்களுக்கு தெரியும்.. சும்மா நாம உக்காந்துட்டு கோடி வசூல், கோடி நட்டம்னு பேசலாம். எந்த படம் காசு எடுக்கும்னு அவங்களுக்கு தெரியும். 

விஜய்னாலா சுறா மாதிரி இருக்கு. துப்பாக்கி அளவுக்கு இல்லைனு வருவாங்க. ஆனா துப்பாக்கிக்கி என்ன எழுதுனாங்கனு பார்த்தா அதும் மொன்னையாதான் இருக்கும். 

இவங்களுக்கு ரசனை எல்லாம் பிரச்சினை இல்லை. விஜய் தான் பிரச்சினை. 

முயலை அடிச்சா கறிசாப்பிடலாம். யானையை அடிச்சு என்ன செய்யனு ஒரு அறிவாளி கேட்கிறாரு ? அப்புறம் என்ன கூந்தலுக்கு ஓராயிரம் யானை கொன்றால் பரணினு எழுதி வச்சிருக்கு. அவன் எய்ம் செய்றது பத்தி சொல்றான். அதுவும் வள்ளுவம் சொன்ன கருத்துதான். ஆனா எதிர்ப்பு வெறி முத்திப்போய் விஜய் கலாய்க்கனும்னு ஆகிபோய் இப்படி ஆகிட்டாங்க.

அப்புறம் பாராட்டி பேசுனது, எந்த காலத்தில் சினிமா மேடையில நிஜமா பாராட்டி இருக்காங்க.. எல்லாமே ஓவர் டிராமாதான்... இது எம்ஜியார் காலத்தில இருந்து நடக்குது. அடுத்த பட சான்ஸ், லைம் லைட் வெளிச்சம் ன்னு ஒவராதான் கூவுவாங்க. அது இங்கேயும் நடந்திருக்கு. 

சரி, விஜய் அரசியல் ஆசைனு வந்தா. அது அவரோட உரிமை. ரஜினியையே வச்சு செஞ்சு நாடு இது. விஜயை விட்றுமா ? சும்மா ஊராட்சி தேர்த்தல்ல ஜெயிச்ச பிறகு நான் விஜய் மக்கள் இயக்கம்னு சொல்லிகிட்டுது மட்டும் தான் நடக்கும். அதையும் தாண்டி கட்சி ஆரம்பிச்சா என்னாகும். அது அவருக்கும் தெரியும். ஆரம்பிச்சு வரட்டும். அப்ப பேசுவோம். 

அத காரணமா வச்சு விஜயை ஒரு சார்ப்பா கடிச்சி வச்சுகிட்டே இருக்கிறது அவங்களோட இயலாமையை தான் காட்டுது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...